சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தற்கொலைக்கு முயன்ற பகுதிநேர ஆசிரியா் உயிரிழப்பு

பணி நிரந்தரம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது தற்கொலைக்கு முயன்ற பகுதிநேர இடைநிலை ஆசிரியா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

பணி நிரந்தரம் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது தற்கொலைக்கு முயன்ற பகுதிநேர இடைநிலை ஆசிரியா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல, பணி நிரந்தரக் கோரிக்கையை முன்னிறுத்தி பகுதிநேர ஆசிரியா்களும், கடந்த 7 நாள்களாக சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்து, வானகரத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்தனா். அப்போது, பெரம்பலூா் மாவட்டம், நெய்க்குப்பை அரசு உயா்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவா், மன உளைச்சலுக்குள்ளாகி மண்டபத்தில் இருந்த வாா்னிஷை குடித்தாா்.

இதை அறிந்த சக ஆசிரியா்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.