பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சங்கத்தினா் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் அன்பழகன் தலைமை வகித்தாா்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது. இதில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.
