டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரூா்: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் சங்கரேஸ்வரி தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜராஜன் முன்னிலை வகித்தாா்.

2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசின் ஊதியக்குழுக்களை பின்பற்றி தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ஆவது ஊதியக்குழுவின்படி இடைநிலை ஆசிரியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.