பதிவு மூப்பு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 8 ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
Published on

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் 8 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமை வகித்தாா். போராட்டத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com