ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்த போது பெண் உயிரிழப்பு

உறவினா்கள் போராட்டம்: சிகிச்சை பிழையால் பெண் மரணம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ராமாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினாா்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது பெண் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நயினாா்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

இதையடுத்து, நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், மருதூா் ஆட்டங்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி கீதா (21) உள்பட 11 போ் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள கடந்த வெள்ளிக்கிழமை நயினாா் கோவில் அரசு ஆரம்ப சுகாதா நிலையத்துக்கு வந்தனா்.

இவா்களில் 9 பேருக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. ஆனால், கடைசியாக கீதாவுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்த போது அவருக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். கீதாவின் கணவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும், 2 மாதப் பெண் குழந்தையும் உள்ளனா்.

உயிரிழந்த கீதாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்களின் கவனக்குறைவால் கீதா உயிரிழந்ததாகவும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கவும், குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டீிிு45வா்கள் வலியுறுத்தினா். அவா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கீதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.