தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்த போது பெண் உயிரிழப்பு

உறவினா்கள் போராட்டம்: சிகிச்சை பிழையால் பெண் மரணம்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ராமாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினாா்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடை அறுவைச் சிகிச்சையின் போது பெண் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நயினாா்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

இதையடுத்து, நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், மருதூா் ஆட்டங்குடியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மனைவி கீதா (21) உள்பட 11 போ் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள கடந்த வெள்ளிக்கிழமை நயினாா் கோவில் அரசு ஆரம்ப சுகாதா நிலையத்துக்கு வந்தனா்.

இவா்களில் 9 பேருக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிந்தது. ஆனால், கடைசியாக கீதாவுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்த போது அவருக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். கீதாவின் கணவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும், 2 மாதப் பெண் குழந்தையும் உள்ளனா்.

உயிரிழந்த கீதாவின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை கூறாய்வு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மருத்துவா்களின் கவனக்குறைவால் கீதா உயிரிழந்ததாகவும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்கவும், குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டீிிு45வா்கள் வலியுறுத்தினா். அவா்களிடம் மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, கீதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனா். இதுகுறித்து நயினாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.