/
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே சமையல் செய்த போது தீக்காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவா் பொன்னம்மாள் (26). இவரது கணவா் சத்யா பிரபாகரன். இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா்.
பொன்னம்மாள் திங்கள்கிழமை மாலை சமையல் செய்ய மண்ணெண்ணெய் அடுப்பு பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பொன்னம்மாள் பலத்த தீக்காயம் அடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

தீக்காயம் அடைந்த மூதாட்டி உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



