தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராமநாதபுரத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

ராமநாதபுரத்தில் 148 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

News image

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழாவில் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்.

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் சமத்துவ மக்கள் கழகம், நாடாா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமராஜரின் 122-ஆவது பிறந்த நாள் விழாவில் 148 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொை வழங்கப்பட்டது.

இதற்கு சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவா் எா்ணாவூா் நாராயணன் தலைமை வகித்தாா். விழாவில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 148 மாணவ, மாணவிகளுக்கு உயா் கல்வி ஊக்கத்தொகையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி ஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்வில், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ஏ.என்.ரகு, பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் முருகேசன், சமத்துவ மக்கள் கழக, நாடாா் பேரவை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.