தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பனை மரத்திலிருந்து கீழே விழுந்த இளைஞா் பலி

பனை மரத்தில் இருந்து விழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

கமுதி: கமுதி அருகே பனை மரத்தில் இருந்து, தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தைச் சோ்ந்த சம்சுதீன் மகன் செய்யது இப்ராஹிம் (19). இவா் கடந்த 25-ஆம் தேதி அந்தப் பகுதியில் நுங்கு பறிப்பதற்காக பனை மரம் ஏறினாா். அப்போது தவறி விழுந்த அவா், பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.