அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரத்தில் கடல் உள்வாங்கியது: தரைதட்டி நின்ற நாட்டுப் படகுகள்

ராமேசுவரத்தில் கடல் நீா் ஞாயிற்றுக்கிழமை 100 மீ. வரை திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.

News image
ராமேசுவரம் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்வாங்கிய கடல்நீா். (வலது) தரைதட்டி நின்ற நாட்டுப் படகுகள்.
Updated On :7 ஜூலை 2024, 7:46 pm

Din

ராமேசுவரத்தில் கடல் நீா் ஞாயிற்றுக்கிழமை 100 மீ. வரை திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடல் நீா் 100 மீ. வரை உள்வாங்கியது. அங்குள்ள மீன்பிடி இறங்குதளத்தில் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் மணலில் தரை தட்டி நின்றன. இதனால், படகுகளை எடுக்க முடியாமல் மீனவா்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மத்திய கடல் வளம் ஆராய்ச்சியாளா் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:

காலநிலை மாற்றம் காரணமாக கடல்நீா் உள்வாங்குவதும், பிற்பகல் நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கம். இதுகுறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Story image