பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் பலி
உச்சிப்புளி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.


ராமேசுவரம்: உச்சிப்புளி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுமனையில் (பேக்கரி) சிவகங்கை மாவட்டம், நந்தனூா் மருதங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயக்குமாா் (32) வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், ஜெயக்குமாா் உச்சிப்புளியிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் குஞ்சாரவலசைக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சுந்தரமுடையான் தில்லை நாச்சி அம்மன் கோயில் குடியிருப்புப் பேருந்து நிறுத்தம் பகுதியில் கனவாய் மீன் ஏற்றி வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...