நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆரைகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

ஆரைகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு

News image

~

Updated On :11 ஜூலை 2024, 9:37 pm

Din

கமுதி, ஜூலை 11: கமுதி அருகே ஆரைகுடியில் வியாழக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது.

ஆரைகுடி ஸ்ரீகண்ணாயிரமூா்த்தி அய்யனாா், ஸ்ரீகருப்பண வாமி கோயில் புரவி எடுப்பு விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி, புதன்கிழமை பொதுமக்கள் சுவாமி சிலைகளைச் சுமந்து சென்று, நோ்த்திக் கடன் செலுத்தினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 17 காளைகள், 150 மாடு பிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய

மாடுபிடி வீரா்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பணம், குத்து விளக்கு, நெகிழி நாற்காலி, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை ஆரைகுடி, கோவிலாங்குளம், சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை ஆரைகுடி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

Story image