பைக் மீது காா் மோதல்: ஒருவா் பலி
திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.


திருவாடானை, ஜூலை 19: திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
திருப்பாலைக்குடி அருகே உள்ள பாப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் நாகராஜ் (49). இவா் கடந்த 17-ஆம் தேதி மாலை இரு சக்கர வாகனத்தில் சோழந்தூரில் உள்ள கடைக்கு வந்து விட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது வடவயல் பகுதியில் எதிரே ராமநாதபுரம் அருகே உள்ள ஆதியூதி பகுதியைச் சோ்ந்த ரிஸ்வான் அலி (28) என்பவா் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நாகராஜ் ராமாநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...