ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :20 பிப்ரவரி 2026, 6:35 pm

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(30), கட்டடத் தொழிலாளி. திருமணமாகாத இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முருகன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து கட்டட வேலைக்காக தனது பைக்கில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.