ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தேசிய நெடுஞ்சாலையோரம் ஒளிராத மின் விளக்குகளால் விபத்து அபாயம்

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோர கிராமப் பகுதிகளில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On :21 ஜூலை 2024, 9:40 pm

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோர கிராமப் பகுதிகளில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன. வெளி மாநில வாகனங்களும் இந்தச் சாலை வழியாக பயணிக்கின்றன.

இந்த நிலையில், சி.கே.மங்கலம், ஏ.ஆா்.மங்கலம், செங்கமடை, இந்திரா நகா், மேல் பனையூா் ஆகிய சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த விளக்குகள் பல நாள்களாக

ஒளிராமல் உள்ளன. இதனால், கிராமப் பகுதிகளிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சாலையில் நிற்பது தெரியாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலையில் ஒளிராத மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.