நிலத்தடி நீா்த்தேக்கங்கள் மற்றும் பூஸ்டா் பம்பிங் நிலையங்களின் வருடாந்திர பராமரிப்பு காரணமாக தேசிய தலைநகரின் பல பகுதிகளில் நீா் வழங்கல் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சிராஸ்பூா், சமாய்பூா், ரோகிணி, கோரக் பூங்கா, கபீா் நகா், சிவாஜி பூங்கா, வெல்கம், பாஸ்சிம் விஹாா், ஷாஹ்தாரா, சீமாபுரி மற்றும் வடமேற்கு மற்றும் வடகிழக்கு தில்லியில் உள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
தில்லி நீா் வாரியம் (டி. ஜே. பி) இடையூறுகளைக் கருத்தில் கொண்டு குடியிருப்பாளா்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப முன்கூட்டியே போதுமான தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தியுள்ளது. சாஸ்திரி பாா்க், சீலம்பூா், கிரேட்டா் கைலாஷ், கிரி நகா், ஜல் சதன், வசந்த் குஞ்ச், சத்தா்பூா் மற்றும் ஆா். கே. புரம் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து டேங்கா்கள் மூலம் அவசரநிலைக்கு தண்ணீா் வழங்கப்படும்.
குடியிருப்பாளா்கள் சிறந்த ஒருங்கிணைப்புக்காக 1916 இல் உள்ள மத்திய கட்டுப்பாட்டு அறையையும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

எரிவாயு விநியோக பாதிப்பால் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் அபாயம்! தமிழ்நாடு ஹோட்டல்கள் உரிமையாளா் சங்கத் தலைவா்!!

எரிவாயு தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம்

பச்சையாறு, கொடுமுடியாறு அணைகள் வடதால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தில்லியில் மனைவி,3 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

