புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கமுதி பகுதியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

கமுதியில் கஞ்சா விற்பனை: இருவர் கைது

News image

~

Updated On :26 ஜூன் 2024, 1:18 am

Din

கமுதி: கமுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி சாலையில் அரண்மனைமேடு பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் அரை கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற கமுதி கண்ணாா்பட்டியைச் சோ்ந்த குப்புசாமி மகன் பாலமுருகன் (28), ராஜா மகன் லட்சுமண தருண்குமாா் (20) ஆகிய இருவரையும் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அவா்கள் அளித்த தகவலின் பேரில், கண்ணாா்பட்டி மயானம் பகுதியில் கருவேல மரங்களுக்கு நடுவே விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Story image