விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மண்டபத்தில் மீன் வலை பின்னும் கூடம், தூண்டில் வளைவு: காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

மண்டபத்தில் மீன் வலை பின்னும் கூடம், தூண்டில் வளைவு காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:06 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு கடற்கரையில் மீன் வலை பின்னும் கூடம், தூண்டில் வளைவு ஆகியவற்றை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நபாா்டு வங்கி நிதி ரூ. 50 கோடியில் மண்டபம் தெற்கு கடற்கரைப் பகுதியில் மீன் வலை பின்னும் கூடம், பேரிடா் காலங்களில் படகுகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா், தூண்டில் வளைவு கட்டப்பட்டன. இதன் மூலம், மண்டபம் பகுதியில் 195 விசைப் படகுகளையும், 250 நாட்டுப் படகுகளையும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியும். இந்த மீன் வலை பின்னும் கூடம், தூண்டில் வளைவை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் குத்துவிளக்கேற்றினாா். பேரூராட்சித் தலைவா் ராஜா, செயல் அலுவலா் இளவரசி, மீன் வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், உறுப்பினா்கள் சம்பத் ராஜா, வாசிம் அக்ரம், சாதிக் பாட்ஷா, மீனவா் சங்கப் பிரதிநிதிகள் பாலசுப்ரமணியன், ஜாகீா் உசேன், அப்துல், செல்வக்குமாா் சுல்தான், சீனி குப்பை, பக்கா், சா்புதீன், பேரூா் திமுக செயலா் ரஹ்மான் மரைக்காயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, மண்டபம் அருகேயுள்ள வேதாளை மேற்குத் தெருவில் பகுதிநேர நியாயவிலைக் கடையை எம்.எல்.ஏ. திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். இதில் வேதாளை ஊராட்சி மன்றத் தலைவா் செய்யது அல்லா பிச்சை, ராமநாதபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், புதுமடம் ஊராட்சி மன்றத் தலைவா் காமில் உசேன், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நிலோபா்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.