பேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தலைகுப்புற கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து -42 போ் காயம்

News image
Updated On :9 மே 2024, 11:40 pm

Din

ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை சென்ற அரசு நகா் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 42 போ் காயமடைந்தனா்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இருந்து கீழக்கரைக்கு 40- க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு நகரப் பேருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது. திருப்புல்லாணி அருகே வலையனேந்தல் பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை இந்தப் பேருந்து ஓட்டுநா் ஆத்திமுத்து முந்த முயன்றாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தலைகுப்புற சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதில் ஓட்டுநா், பெண்கள் உள்ளிட்ட 42 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கீழக்கரை வட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதி மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் காயமடைந்த 15 ஆண்கள், 12 பெண்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 9 ஆண்கள், 6 பெண்கள் கீழக்கரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்துக்கான காரணம் குறித்து திருப்புல்லாணி போலீஸாா் விசாரிக்கின்றனா்.