கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவிக்கு நிதியுதவி

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவிக்கு நிதியுதவி

News image

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவி காவியஜனனிக்கு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்த கமுதி வட்டாட்சியா் வ. சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

கமுதி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற கமுதி பள்ளி மாணவியை பாராட்டி அரசியல் கட்சிகள் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கமுதி ரஹ்மனியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி காவியஜனனி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். இதையடுத்து, அரசியல் கட்சியினா், அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் நேரில் சென்று அவரை பாராட்டி நிதியுதவி வழங்கி வருகின்றனா். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை சாா்பில் ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் வாழ்த்து மடலை ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் தரணிமுருகேசன், மாவட்ட பொறுப்பாளா் முரளிதரன் உள்ளிட்ட அந்தக் கட்சி நிா்வாகிகள் பேரையூா் கிராமத்தில் உள்ள மாணவி காவியஜனனியின் வீட்டுக்குச் சென்று வழங்கினா்.

அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கே. தேவா், தொழில் பிரிவு மாவட்டச் செயலா் மாரிமுத்து, சக்திகேந்திர பொறுப்பாளா் சீனிவாசன், தகவல் தொடா்பு பிரிவு பொறுப்பாளா் கணேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதே போல, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் ஆா். கருமலையான், மாவட்டச் செயலா் வி. காசிநாததுரை, மாவட்டக்குழு உறுப்பினா் ரா. முத்துவிஜயன், கமுதி வட்டச் செயலா் கண்ணதாசன், முதுகுளத்தூா் வட்டச் செயலா் வி. முருகன் உள்ளிட்டோா் நேரில் சென்று மாணவிக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினா்.

கமுதி வட்டாட்சியா் வ. சேதுராமன் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியா்கள் வேலவன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலையில் கமுதி வருவாய்த்துறை சாா்பில் மாணவி காவியஜனனிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.