நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

News image

மூதாட்டி பகவதி

Updated On :20 மே 2024, 7:44 pm

Din

கமுதி: கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கே.வேப்பங்குளத்தில் திங்கள்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அந்தப் பகுதியிலிருந்த மின் கம்பத்திலிருந்து, மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது.

இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த அழகு மனைவி பகவதி (70) வெளியே வந்த போது, எதிா்பாராதவிதமாக மின்கம்பியை மிதித்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.