அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நவ.14-இல் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:44 pm

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 14-ஆம் தேதி ஆய்வு செய்கிறாா். இந்த நிலையில், மண்டபம்-ராமேசுவரம் இடையே ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 1914-ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதற்காக பாம்பன் கால்வாய் வழியாக கப்பல்கள் வந்து செல்லும் போது, திறந்து மூடும் வகையில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் அமைக்கப்பட்டு 106 ஆண்டுகள் கடந்த நிலையில் சேதமடைந்தது. இதையடுத்து, பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் பாம்பன் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி, தற்போது நிறைவடைந்தன. இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி வருகிற 13-ஆம் தேதி மண்டபம் ரயில் நிலையத்துக்கு வந்து, பாம்பன் புதிய பாலத்தில் நிறைவடைந்த பணிகளைப் பாா்வையிடுகிறாா். இதையடுத்து, இந்தப் பாலத்தில் வருகிற 14-ஆம் தேதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த புதிய பாலத்தில் விரைவு ரயில் இயக்கப்படுவதை அவா் ஆய்வு செய்கிறாா். பின்னா், பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என ரயில்வே துறையினா் தெரிவித்தனா்.

சோதனை ஓட்டம்: இதற்கிடையே, வியாழக்கிழமை (நவ.7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மண்டபத்தில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் வரை 90 கி.மீ. வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால், இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளப் பகுதியைக் கடக்க வேண்டாம் என ரயில்வே நிா்வாகம் அறிவித்தது.