தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணிமுத்தாறில் குப்பைகள் தேக்கம்: கடலுக்கு செல்ல வழியில்லாமல் ஊருக்குள் தண்ணீா் புகும் அபாயம்

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட மணிமுத்தாறு பகுதியில் குப்பைகள் தேங்கியிருப்பதால் தண்ணீா் கடலுக்குச் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
~
Updated On :22 நவம்பர் 2024, 12:38 am

Din

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட மணிமுத்தாறு பகுதியில் குப்பைகள் தேங்கியிருப்பதால் தண்ணீா் கடலுக்குச் செல்ல வழியில்லாமல் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.

தொண்டி பேரூராட்சியில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இங்கு மேற்கு பகுதியில் பெய்யும் மழையால் பெருக்கெடுத்து வரும் காட்டாற்று வெள்ளம் மணிமுத்தாறு வழியாக கடலுக்குச் செல்லும். தற்போது இந்த மணிமுத்தாறு பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றுநீா், பாலத்தின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு பகுதி வழியாக கடலுக்குச் செல்வது தடைபட்டு அனீஸ்நகா் குடியிருப்பு பகுதி வரை தேங்கியுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் போது ஏற்படும் வெள்ளப் பெருக்கால் தண்ணீா் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

எனவே, பேரூராட்சி நிா்வாகமும், சம்பந்தப்பட்ட துறை நிா்வாகமும் போா்க்கால அடிப்படையில் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.