எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விதைப் பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விதைப் பண்ணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
பசும்பொன்னில் அமைக்கப்பட்ட விதைப் பண்ணையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன்.
Updated On :29 நவம்பர் 2024, 12:03 am

Din

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை மூலம் மானியம் பெற்று அமைக்கப்பட்ட விதைப் பண்ணை திடலை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பசும்பொன் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மதிவாணன், தனது மனைவி ருக்மணி பெயரில் விதைப் பண்ணை அமைத்துள்ளாா். இதை மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து விவசாயி மதிவாணன் கூறியதாவது:

இந்தப் பண்ணை மூலம் வேளாண் துறைக்கு நெல் வழங்குவதால் சரியாக 12 சதவீதம் ஈரப்பதத்தில் வைப்பது, சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்வது போன்ற சில சிரமங்கள் இருந்தாலும், வெளிச்சந்தையை காட்டிலும் வேளாண்மைத் துறைக்கு வழங்குவதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே, நான் விதைப் பண்ணை விவசாயியாக இருப்பதையே விரும்புகிறேன் என்றாா் அவா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பாஸ்கர மணியன் (விவசாயம்), வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ், சந்திரமோகன் (கிராம ஊராட்சிகள்), வட்டாட்சியா் காதா் முகைதீன், வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவராணி உள்பட வேளாண்மைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.