47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காணிக்கூரில் மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூா் ஸ்ரீபாதாள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

News image
காணிக்கூரில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்.
Updated On :2 அக்டோபர் 2024, 8:13 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூா் ஸ்ரீபாதாள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. காணிக்கூா்-கமுதி சாலையில் 14 கி.மீ. இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப்பணம், பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை காணிக்கூா் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.