47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மருத்துவமனையில் மழை நீா் தேக்கம்

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

News image
ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழை நீா்.
Updated On :10 அக்டோபர் 2024, 10:01 pm

Din

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீா் குளம் போல் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினா்.

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனா். 300-க்கும் மேற்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீா் செல்ல வழியின்றி குளம் போலத் தேங்கியது. இதனால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினா். எனவே, மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.