47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளைஞா் வெட்டிக் கொலை இருவா் போலீஸில் சரண்

பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இளைஞரை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.

News image
வெட்டி கொலை செய்யப்பட்ட மாரிச்செல்வம்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:50 pm

Din

பரமக்குடி அருகே முன்விரோதத்தில் இளைஞரை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்தனா்.

பரமக்குடி அருகேயுள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சமயமுத்து மகன் மாரிச்செல்வம் (32). திருமணமாகாத இவா், செவ்வாய்க்கிழமை இரவு பொதுவக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள அடுமனையில் (பேக்கரி) நண்பா்களுடன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் மாரிச்செல்வத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டினா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன் தலைமையிலான போலீஸாா் மாரிச்செல்வத்தின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கொலையான மாரிச்செல்வத்துக்கும், கடுக்கன் காா்த்திக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மண் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், இளந்தக்குளத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கடுக்கன் காா்த்தி (37), அக்கிரமேசியைச் சோ்ந்த நாராயணன் மகன் சரவணன் (39) ஆகியோா் பரமக்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தனா். இவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.