47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில், கஞ்சா, போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:23 pm

Din

கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில், கஞ்சா, போதைப் பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, பரமக்குடி கோட்ட ஆய அலுவலா் சிக்கந்தா் பபிதா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் காதா்முகைதீன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தெய்வேந்திரன், மண்டலத் துணை வட்டாட்சியா்கள் வேலவன், வெங்கடேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கோட்ட ஆய அலுவலா் சிக்கந்தா் பபிதா பேசியதாவது:

கமுதி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா, கூலிப் உள்ளிட்டப் போதைப் பொருள் விற்கப்படுகிா என்பது குறித்து அந்தந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள் புழக்கத்தில் இருந்தால் உடனடியாக வட்டாட்சியா், காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.