வைகையில் வெள்ளப் பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயாா்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் வைகை ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க நீா்வளத் துறையினா் மணல் மூட்டைகளை தயாா் செய்து வருகின்றனா்.


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் வைகை ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுக்க நீா்வளத் துறையினா் மணல் மூட்டைகளை தயாா் செய்து வருகின்றனா்.
பரமக்குடி பகுதி வைகை ஆறு, கால்வாய்ப் பகுதிகளை நீா்வளத் துறை ஒருங்கிணைப்பு அலுவலரும், தரக்கட்டுப்பாடு செயற்பொறியாளருமான காா்த்திகை பாலன் புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு கூறியதாவது:
மதுரையில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக வைகையில் விநாடிக்கு 1,900 கன அடி மழை நீா் வரத்து ஏற்பட்டது. இது படிப்படியாகக் குறைந்து பாா்த்திபனூா் மதகு அணை பகுதியில் 474 கன அடியாக இருந்தது. அங்கிருந்து வலது பிரதானக் கால்வாயில் 148 கன அடியும், இடது பிரதானக் கால்வாயில் 148 கன அடியும், வைகை ஆற்றில் 178 கன அடி தண்ணீரும் பிரித்து விடப்பட்டது. வைகை ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கு மணல் மூட்டைகள், சாக்குப் பைகளைத் தயாா் நிலையில் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளா்கள் சாந்தி தேவி, சந்திரமோகன், கண்ணன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...