அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வங்கக் கடலில் சூறைக் காற்று: மீன்பிடித் தொழில் பாதிப்பு

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

News image
ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் பாதுகாப்பாக புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:43 pm

Din

வங்கக் கடலில் சூறைக் காற்று வீசுவதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமைகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் காற்றின் வேகம் 45 முதல் 65 கி.மீ. வரை வீசக் கூடும் என்பதாலும், ராமநாதபுரம் மாவட்ட விசைப் படகு, நாட்டுப் படகு மீனவா்கள் அக். 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறையினா் தடை விதித்தனா்.

இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதன்காரணமாக, ராமேசுவரம் மீன் இறங்கு தளத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இதேபோல, பாம்பன், மண்டபம் மீன் இறங்கு தளங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு:

புயல் உருவாகக் கூடிய திடீா் காற்றோடு மழை பெய்வதற்கான சூழல் உள்ளது என மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தொலைவிட முன்னறிவிப்பாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்றப்பட்டது.