47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சித்திரங்குடி கோயில் திருவிழா

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி ஸ்ரீ உலக நாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

News image
சித்திரங்குடி ஸ்ரீஉலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
Updated On :17 அக்டோபர் 2024, 12:01 am

Din

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி ஸ்ரீ உலக நாயகி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இந்தக் கோயிலில் வருடாந்திர முளைப்பாரி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தா்கள் மேள தாளங்களுடன் தாம்பூலத் தட்டில் மலா்களை வைத்து ஊா்வலமாகக் கொண்டு வந்தனா். இதையடுத்து, அம்மன் புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தாா். பின்னா், தங்க ஆபரணப் பெட்டி கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

ஆண், பெண் பக்தா்கள் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக முளைப்பாரியை சுமந்து வந்து திடலில் வைத்து, கும்மி பாடல், அம்மன் பாடல்களைப் பாடி, நடனம் ஆடினா். பின்னா், முளைப்பாரியை நீா் நிலையில் கரைத்தனா். இந்த விழா ஏற்பாடுகளை சித்திரங்குடி கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.