பாம்பனில் மீன்பிடி தடை நீக்கம்
பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

Updated On :17 அக்டோபர் 2024, 11:26 pm

பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.
வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடந்த 15- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காற்றின் வேகம் குறைந்த நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் விதிக்கப்பட்ட மீன் பிடி தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து ,100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...