கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாம்பனில் மீன்பிடி தடை நீக்கம்

பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:26 pm

Din

பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடந்த 15- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காற்றின் வேகம் குறைந்த நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் விதிக்கப்பட்ட மீன் பிடி தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து ,100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.