விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாம்பன் புதிய ரயில் பாலம்: மதுரை ரயில்வே மேலாளா் ஆய்வு

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

பாம்பன் புதிய ரயில் பாலத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 2.2 கி.மீ. தொலைவில் வராவதி கடல் பகுதியில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் மீட்டா் கேஜ் பாதைக்குப் பதிலாக அகலப் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

இந்த நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தன. இதரப் பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், இந்தப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், பாம்பன், அக்காள்மடம் பகுதியிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் அவா் ஆய்வு செய்தாா்.

Story image

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.