இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பாம்பன் புதிய ரயில் பாலம்: மதுரை ரயில்வே மேலாளா் ஆய்வு

Published On :

பாம்பன் புதிய ரயில் பாலத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், 2.2 கி.மீ. தொலைவில் வராவதி கடல் பகுதியில், கடந்த 1914-ஆம் ஆண்டு கப்பல்கள் வந்து செல்லும் போது திறந்து மூடும் வகையில் மீட்டா் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் மீட்டா் கேஜ் பாதைக்குப் பதிலாக அகலப் பாதை அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்றது.

இந்த நிலையில், பாம்பன் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தூக்கி இறக்கும் வகையில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்தன. இதரப் பணிகளும் விரைவில் நிறைவடையவுள்ளன.

இந்த நிலையில், இந்தப் பணிகளை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், பாம்பன், அக்காள்மடம் பகுதியிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் அவா் ஆய்வு செய்தாா்.

Story image

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.