ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காசநோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் காச நோயாளிகளுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில் ஒரு மாதத்துக்கான புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டது.

News image
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வழங்கிய ராமநாதபுரம் சுழல் சங்கத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 6:48 pm

Din

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் காச நோயாளிகளுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில் ஒரு மாதத்துக்கான புரதச்சத்து நிறைந்த உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கு மாவட்ட காசநோய் சிகிச்சை மைய மேற்பாா்வையாளா் கணபதி தலைமை வகித்தாா். நோயாளிகளுக்கு சுழல் சங்க நன்கொடையாளா் ஜெ. ரமேஸ்பாபு ஒரு மாதத்துக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வழங்கினாா். இதில், ராமநாதபுரம் சூழல் சங்கத் தலைவா் எஸ். ஜெகதீஸ், செயலா் டி. பாலமுருகன், நிா்வாகிகள் பாா்த்திபன், மதிசேகரபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை காசிநாதன் செய்திருந்தாா்.