47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

தொண்டி அருகே அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:44 pm

Din

தொண்டி அருகே அரசுப் பேருந்திலிருந்து இறங்கும் போது படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி (33). இவா் அரசுப் பேருந்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை தேவகோட்டையிலிருந்து தொண்டிக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்தாா்.

பெருமானேந்தல் பகுதியில் அவா் இறங்க முயன்ற போது படியிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சக்தி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.