என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

தினமணி செய்தி எதிரொலி: சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன.

News image

சாத்தனூா் கிராமத்தில் விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்களை திங்கள்கிழமை சீரமைத்த மின் வாரிய ஊழியா்கள்.

Updated On :1 அக்டோபர் 2024, 2:22 am IST

கமுதி: முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கும் சேதமடைந்திருந்தன.

இவற்றை சீரமைத்துத் தரக் கோரி ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின் வாரிய அலுவலா்கள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த மின் கம்பங்களை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image

இது தொடா்பாக கடந்த 28- ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைடுத்து, முதுகுளத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை முதுகுளத்தூா் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், சாத்தனூா் கிராம விளைநிலத்தில் சாய்ந்திருந்த 5 மின் கம்பங்களை சீரமைத்தனா். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.