காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தினமணி செய்தி எதிரொலி: சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைப்பு

முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன.

News image
சாத்தனூா் கிராமத்தில் விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்களை திங்கள்கிழமை சீரமைத்த மின் வாரிய ஊழியா்கள்.
Updated On :30 செப்டம்பர் 2024, 8:52 pm

Din

கமுதி: முதுகுளத்தூா் அருகே விளைநிலத்தில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் தினமணி செய்தி எதிரொலியாக திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 20- க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும், சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கும் சேதமடைந்திருந்தன.

இவற்றை சீரமைத்துத் தரக் கோரி ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின் வாரிய அலுவலா்கள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த மின் கம்பங்களை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image

இது தொடா்பாக கடந்த 28- ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதைடுத்து, முதுகுளத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் திங்கள்கிழமை முதுகுளத்தூா் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், சாத்தனூா் கிராம விளைநிலத்தில் சாய்ந்திருந்த 5 மின் கம்பங்களை சீரமைத்தனா். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.