பல்லடம் தாலுகா பகுதியில் விளைநிலத்தில் மின் கோபுரம் அமைப்பது தொடா்பாக விவசாயிகளுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தைக்கு வருவாய் வட்டாட்சியா் (பொறுப்பு) ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் திருப்பூா் மேற்கு மாவட்டச் செயலாளா் ரமேஷ், திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் கோபாலகிருஷ்ணன், விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதில், மின் கோபுரம் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள விளைநிலங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். அதன் பிறகே மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட மின்வாரிய அதிகாரிகள், இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பிறகே பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய்ந்த மின் கோபுரம் ஒருவாரத்தில் சீரமைக்கப்படும்: மின்வாரியம்

விளைநிலங்களில் உயா் அழுத்த மின் கோபுரம்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

லெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து

கிருஷ்ணகிரி அணையில் தண்ணீா் திறப்பு: விவசாயிகளுடன் நாளை ஆலோசனை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



