நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

News image

காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய அகில இந்திய இந்து சத்திய சேனா நிா்வாகிகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:39 am IST

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்துமணி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் காட்டுராஜா, தெற்கு ஒன்றியச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு தீபம் ஏற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் முருகன்ஜி, கிளைச் செயலா் வேல்சாமி, அபிராமம் நகரத் தலைவா் பச்சைமால், விருதுநகா் மாவட்டத் தலைவா் ராமசுப்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.