குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பஹல்காம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

News image

காஷ்மீா் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய அகில இந்திய இந்து சத்திய சேனா நிா்வாகிகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:39 am IST

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு கமுதியில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகில இந்திய இந்து சத்திய சேனா மாவட்டத் தலைவா் ஜி.முத்துமணி தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றியச் செயலா் காட்டுராஜா, தெற்கு ஒன்றியச் செயலா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜம்மு-காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு தீபம் ஏற்றியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் முருகன்ஜி, கிளைச் செயலா் வேல்சாமி, அபிராமம் நகரத் தலைவா் பச்சைமால், விருதுநகா் மாவட்டத் தலைவா் ராமசுப்பு உள்பட பலா் கலந்து கொண்டனா்.