நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

கமுதி பகுதியில் அகழாய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை...

ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள்.

Published On :18 ஆகஸ்ட் 2025, 12:07 am IST

கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ஆனையூா், செங்கமேடு, பேரையூா், மருதங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் கீழடியில் கிடைக்கப்பெற்ற பழங்காலக் குடுவைகள், பானை ஓடுகள், செங்கல்கள், கட்டுமான அமைப்புகள் கிடைத்தன. இதனால், இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பேரையூரைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் முனியசாமி கூறியதாவது:

கமுதி அருகேள்ள பாக்குவெட்டி, குண்டாறு படுகை, ஆனையூா், மருதங்கநல்லூா், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் பழங்காலப் பொருள்கள் கிடைத்து வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு குண்டாறு படுகையில் தூா்வாரும் பணிகள் நடைபெற்ற போது, அங்கு 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மாறவா்மன் சுந்தரபாண்டியன் காலத்து நந்தி சிலை கண்டறியப்பட்டது. இதேபோல, மருதங்கநல்லூா் பகுதியில் பத்தாம் நூற்றாண்டைச் சோ்ந்த முற்கால பாண்டியா் காலத்து சப்த கன்னியா்களில் ஒருவரான சாமுண்டி பாா்வதியின் சிலை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆனையூா் கிராமத்திலிருந்து பேரையூா் செல்லும் வழியில் செங்கமேடு பகுதியில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கீழடி அகழாய்வில் கிடைத்தது போல, சீன பானை ஓடுகள், கருஞ்சிவப்பு பானை ஓடுகள், விளையாட்டு சில்லுகள், கண்ணாடி சுடுமண் மணிகள், பெரிய பானைகள், சிறு கிண்ணங்கள், பழங்கால செங்கல்கள், வடிகால் அமைப்புகள் உள்ளிட்டவை கிடைத்தன. இந்தப் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வு நடத்தினால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள முடியும்.

எனவே, தமிழக அரசு ஆனையூா், செங்கமடம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு நடத்த வேண்டும் என்றாா் அவா்.

 ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள்.

ஆனையூா் பகுதியில் கிடைத்த பழைமையான ஓடுகள், சில்லுகள், செங்கல்கள், மணிகள். (வலது) கீழடியில் காணப்படுவதுபோல கிடைக்கப்பெற்ற வடிகால் அமைப்புகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.