கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு: மத்திய அரசுக்கு முதல்வா் கோரிக்கை
தமிழகத்தில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை


தமிழகத்தில் கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: கீழடி, ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் வேண்டி தமிழக அரசு கடிதம் அனுப்பி 8 மாதங்கள் ஆகிறது.
இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. நவம்பரில் நடைபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைவா் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் 8 மாதங்களாகியும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரைதான். இதை தவறவிட்டால் பருவ மழையால் களப்பணிகள் தடைபடும். முக்கிய ஆராய்ச்சிகளும் தாமதமாகும். 2025-2026- ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும்.
தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்கு பெருமை சோ்ப்பது. எனவே, அகழ்வாராய்ச்சிக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...