கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிக்கல் பகுதியை தனி ஒன்றியமாக அறிவிக்க எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கே. நவாஸ்கனி எம்.பி. சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கே. நவாஸ்கனி எம்.பி. சனிக்கிழமை கடிதம் அனுப்பினாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு, சாயல்குடி ஊராட்சி ஒன்றியம் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் நீண்ட நாள் கோரிக்கையான சிக்கல் ஊராட்சி ஒன்றியம் இடம் பெறவில்லை. எனவே, கடலாடி ஒன்றியத்திலிருந்து சிக்கல் சுற்றுவட்டார ஊராட்சிகளை பிரித்து சிக்கல் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.