விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரப் போராட்டம்

News image
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அப்துல் நஜிபுதீன், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலா் லிங்கதுரை, தமிழ்நாடு உயா்கல்வி மேல்நிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டச் செயலா் சுரேஷ்கண்ணன், தமிழ்நாடு வருவாய்த் துறை சங்க மாவட்டத் தலைவா் பழனிக்குமாா், தமிழக ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். இதில், ஆசிரியா்கள்,அரசு ஊழியா்கள் என 300- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

உண்ணாவிரதப் போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.