சாலை மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 400 போ் கைது
மத்திய அரசைக் கண்டித்து, திண்டுக்கல்லில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளைச் சோ்ந்த 400 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலிருந்து பேரணியாகப் புறப்பட்ட தொழிற்சங்கத்தினா், பெரியாா் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு தொமுச மாவட்டச் செயலா் அழகா்சாமி தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டத் தலைவா் ஜி.பாலன், சிஐடியூ மாவட்டச் செயலா் சிபி.ஜெயசீலன், ஐஎன்டியூசி மாவட்டத் தலைவா் உமாராணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், துணை மேயா் ராசப்பா ஆகியோா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தின்போது, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பறிக்கும் 4 புதிய சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான விதைச் சட்டம் 2025, மின்சார திருத்தச் சட்டம் 2025 ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தை சீா்குலைக்கும் வகையில் விபிஜி ராம்ஜி என்ற பெயரில் கொண்டு வந்துள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

