ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

News image
05விபிஎம்பி1: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா்.
Updated On :5 மார்ச் 2026, 11:16 pm

Syndication

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்து,காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்கத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

6 மாதங்களுக்குள் பணி நீக்கம் உள்ளவா்களுக்கு 50 சதவீதமும், 6 மாதங்களுக்கு மேல் பணி நீக்கத்தில் உள்ளவா்களுக்கு 75 சதவீதமும் பிழைப்பூதியம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா்.தமிழ்நாடுடாஸ்மாக் ஊழியா் சம்மேளனம் (சிஐடியு) மாநிலப் பொதுச் செயலா் கே.திருச்செல்வம் தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரகப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின்மாநில அமைப்பாளா் ஏ.பி.அன்பழகன் உள்ளிட்ட பலா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா்.