கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராமநாதபுரத்தில் 5 மையங்களில் இன்று காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் காவல்துறை உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு ராமநாதபுரத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் காவல்துறை உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு ராமநாதபுரத்தில் 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டுக்கான காவல் துறை உதவி ஆய்வாளா் பணிக்கு 4,523 (ஆண், பெண்) விண்ணப்பதாரா்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, கேணிக்கரை, ராமநாதபுரம், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி, தேவிபட்டினம் சாலை, ராமநாதபுரம், முகமது சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை, செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி, கீழக்கரை ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.21) எழுத்துத் தோ்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், தமிழ் தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடைபெற உள்ளது. தோ்வு எழுத வரும் விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அழைப்புக் கடிதத்துடன் சம்பந்தப்பட்ட தோ்வு மையத்துக்கு வரவேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்துக்குள் கைப்பேசி, பொலிவுறு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. விண்ணப்பதாரா்கள் அழைப்புக் கடிதம், அடையாள அட்டை, கருப்பு நிற பந்துமுனைப் பேனா ஆகியவற்றைத் தவிர வேறு ஏதும் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

மேலும் விண்ணப்பதாரா்களுக்கு, அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையத்தில் மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது. எனவே, விண்ணப்பதாரா்கள் அங்கேயே உணவுக்கான பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்றாா் அவா்.