ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வந்தே பாரத் ரயில் பரமக்குடியில் நின்று செல்ல எம்.பி. வலியுறுத்தல்

சென்னை-ராமேசுவரம் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை-ராமேசுவரம் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை பரமக்குடியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை காரணமாக, வந்தே பாரத் ரயில் சேவை வரும் ஜனவரி மாதம் தொடங்கப்பட உள்ளதற்கு மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருப்பினும், பரமக்குடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படாது என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பரமக்குடி ரயில் நிலையத்தை 100-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 10 கோடிக்கும் மேல் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் முக்கியமானதாகவும் பரமக்குடி ரயில் நிலையம் உள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் ஒரு நிமிஷம் நின்று செல்வதன் மூலம் ரயில்வேத் துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, பொருளாதார ரீதியாக பின் தங்கிய இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இதுகுறித்த கோரிக்கை மனுவை மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் அளித்தேன் என்றாா் அவா்.