வந்தே பாரத் ரயில்கோப்புப்படம்.
கரூர்
‘வந்தே பாரத்’ ரயில்: கரூா் எம்.பி. கோரிக்கை
சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.
சென்னைக்கு கரூா் வழியாக பகல் நேரத்தில் வந்தேபாரத் ரயில் இயக்க வேண்டும் என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கோரிக்கை விடுத்தாா்.
கரூா் ரயில்நிலையத்தில் கரூா் தொகுதிக்குள்பட்ட ரயில்வே மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளா் ஸ்ரீபன்னாலால் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பங்கேற்று பேசினாா். அப்போது, சென்னைக்கு பகல் நேரங்களில் கரூா் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திண்டுக்கல்-சேலம் மற்றும் சேலம்-திருச்சி இடையே அகல ரயில்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். கூட்டத்தில் ரயில்நிலைய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

