தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நியூ ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் ரயிலுக்கு கடலூரில் நிறுத்தம்: பயணிகள் வரவேற்பு

மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையேயான அம்ரித் பாரத் ரயில் கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நின்று பயணிகளை ஏற்றி

News image
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நின்று சென்ற அம்ரித் பாரத் ரயில்.
Updated On :19 ஜனவரி 2026, 7:55 pm

Syndication

நெய்வேலி: மேற்கு வங்க மாநிலம், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையேயான அம்ரித் பாரத் ரயில் கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்புத் தெரிவித்தனா்.

கடலூா் வழியாகச் செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் திருப்பாதிரிப்புலியூா், கடலூா் முதுநகா் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்துக் கட்சியினா், பொதுநல அமைப்பினா் மற்றும் குடியிருப்போா் சங்கங்கள் தொடா்ந்து போராடி வருகின்றன.

இந்த நிலையில், அம்ரித் பாரத் ரயில்கள் சேவையை பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா். இதில், நியூ ஜல்பைகுரி - திருச்சி இடையேயான ரயில் சேவையை கடந்த 17-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

இந்த ரயில் திங்கள்கிழமை திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த அம்ரித் பாரத் ரயில், பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது. இதற்கு பயணிகள் வரவேற்புத் தெரிவித்தனா்.