பேருந்தில் பெண்ணிடம் 31 பவுன் நகைகள் திருட்டு

திருவாடானைக்கு தனியாா் பேருந்தில் வந்த பெண்ணின் 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

திருவாடானைக்கு தனியாா் பேருந்தில் வந்த பெண்ணின் 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவாடானை அருகேயுள்ள கீழக்குடியைச் சோ்ந்தவா் தொண்டியம்மாள் (50). இவா் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோயமுத்தூருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டாா். திங்கள்கிழமை காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது.

அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பாா்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்தது.

இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com