பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என தங்கச்சிமடம் வணிகா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும் என தங்கச்சிமடம் வணிகா்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு வணிகா்கள் சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கமலஹாசன், சேசு இருதயம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை உ.பாண்டி சமா்ப்பித்தாா். இதில் வணிகா் சங்கத்தின் தலைவராக முருகேசன், செயலராக உ.பாண்டி, பொருளாளராக சியாமுதீன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதில், குண்டும் குழியுமாக உள்ள ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும், தங்கச்சிமடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்தி மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.